News October 14, 2025

தருமபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் வேளாண்மை தொடர்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 12, 2025

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கம்!

image

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (நவ.12) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசுத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

தருமபுரி: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

தருமபுரியில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி!

image

தருமபுரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு கீழ் படித்தவர்களுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கபட உள்ளது. தமிழ்நாடு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சி தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1738 . ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!