News November 2, 2025
தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Similar News
News November 2, 2025
Kebab-க்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

லக்னோவின் புகழ்பெற்ற அவதி உணவுக் கலாச்சாரத்துக்கு ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டத்தை UNESCO வழங்கியுள்ளது. இதன்மூலம், கலூட்டி கபாப், பிரியாணி, டோக்கரி சாட் ஆகிய உணவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனித்துவமான உணவுக் கலாச்சாரம், சமையல் கலையை அங்கீகரிக்கவே ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டம் வழங்கப்படுகிறது. இது லக்னோவின் உணவுப் பாரம்பரியத்தை உலகளவில் பிரபலப்படுத்தும்.
News November 2, 2025
BREAKING: விஜய் அறிவித்தார்

SIR-க்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார். அதே சமயம், SIR எதிர்ப்பை வாக்கு அரசியலுக்காக திமுக பயன்படுத்துவதாகவும், அதனால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், SIR-க்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், திமுக இதை செய்யாதது ஏன் எனவும் கேட்டுள்ளார்.
News November 2, 2025
ALERT: வங்கக்கடலில் மீண்டும் உருவானது புயல் சின்னம்!

மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவ.5-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


