News November 14, 2025
தபால் வாக்குகள்… அமலுக்கு வந்த புதிய நடைமுறை

தற்போதுள்ள முறையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதன் முடிவுகள் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, கடைசி சுற்று முடிந்தபின் தான் அறிவிக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு வந்த புதிய நடைமுறையில், கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசி நேரத்தில் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
BREAKING: பாஜக முன்னிலை தொகுதி குறைந்தது

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சற்றுநேரத்திற்கு முன்பு வரை 87 தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக, தற்போது 15 இடங்கள் குறைந்து 72 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், பாஜகவை விட குறைவான தொகுதிகளில் முன்னிலையில் இருந்த அதன் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் JDU, தற்போது 74 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
வாய்விட்ட டிரம்ப்; சமாளிக்கும் USA அரசு

USA-வில் திறமையானவர்கள் இல்லை என <<18265884>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இதற்கு அமெரிக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திறமை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை USA-வுக்கு கொண்டு வந்து, 3-7 ஆண்டுகள் வரை அவர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு பயிற்சியளித்து, பின்னர் அவர்களை தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே டிரம்ப்பின் திட்டம் என கூறி, அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் விளக்கமளித்துள்ளார்.
News November 14, 2025
BREAKING: திமுகவில் இணைந்த உடன் முக்கிய பதவி

திமுகவில் இணைந்த அதிமுக Ex MP மைத்ரேயன், திமுக கல்வியாளர் அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்த சில நாள்களிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, திமுகவின் சீனியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


