News November 14, 2025
தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?
News November 14, 2025
உலகின் முதல் AI குழந்தை!

பிரமாண்டமாய் வளர்ந்து வரும் AI, தற்போது கருவை உருவாக்கி அறிவியல் புரட்சி செய்துள்ளது. மெக்ஸிகோவில் 40 வயது பெண் ஒருவர், AI உதவியுடன் கருத்தரித்து, உலகின் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த IVF சிகிச்சையில், AURA என்ற AI ரோபோ சரியான விந்தணுவை, கருமுட்டையில் செலுத்தி வளர்க்கிறது. லட்சக்கணக்கில் செலவாகும் IVF சிகிச்சை இனி மலிவாகவும், வெற்றிகரமாகவும் மாறும் என்ற நம்பிக்கையை AI அளித்துள்ளது.
News November 14, 2025
தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.


