News November 2, 2025

சேலம் அருகே நொடிப்பொழுதில் அரங்கேறிய துயரம்!

image

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை அடிவாரம் பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது,அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (19) என்பவர் ஓட்டி வந்த டூவிலர் தங்கம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கண்ணங்குறிச்சி போலீசார் விசாரணை!

Similar News

News November 2, 2025

எடப்பாடி அருகே பழக்கடையில் புகுந்த கார்!

image

சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். மேலும் கடையிலிருந்து அனைத்து பழங்களும் நசுங்கி வீணானது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

சேலம் வழியாக புதிய சிறப்பு ரயில் சேவை!

image

ஹூப்ளி மற்றும் இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் (எண் 07355) சேலத்தில்
சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு வரும், 7.55 மணிக்கு புறப்படும். ரயில் எண் 07356 ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு வரும்,5.50 மணிக்கு புறப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். **

News November 2, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!