News November 30, 2025
சேலத்தில் பறிபோன உயிர்கள்! அதிர்ச்சி சம்பவம்

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட பொன்னம்மாப்பேட்டை பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது அல்லி குட்டையில் வசிக்கும் லட்சுமி அம்மாள் என்பாரது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளில் ஆறு ஆடுகளை நேற்று நள்ளிரவு தெருநாய்கள் கடித்து குதறியதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தது இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளது நாய்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
சேலம் அரசு பள்ளி மாணவன் சாதனை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் கபிலன், தமிழக அணியில் கலந்து கொண்டு 56 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சேலம் மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
சேலத்தில் கடன் தொல்லையால் நேர்ந்த சம்பவம்!

சேலம் அம்மாபேட்டை மாருதிநகர் 3வது கிராஸ் பகுதியில் வசிக்கும் சரவணன் (42) சலவை தொழில் செய்து வந்தார். ரூ.3 லட்சம் கடன் பிரச்சனையால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


