News November 12, 2025
சென்னையில் 184 படுகொலைகள்..!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கடந்த 22 மாதங்களில் சென்னையில் மட்டும் 184 படுகொலைகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு 102 கொலைகளும், இவ்வாண்டு 10 மாதங்களில் 82 படுகொலைகளும் நடந்துள்ளன. இதே காலகட்டத்தில் 419 செயின் பறிப்பு சம்பவங்கள், 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பல குற்றங்களை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 12, 2025
சென்னையில் அதிரடி மாற்றம்!

தமிழகம் முழுவதும் காவல்துறையில் 12 டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றிய வந்த சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
News November 12, 2025
சென்னை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

சென்னை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 12, 2025
சென்னை: சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள ஆபத்து!

சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை நச்சுப் பொருள்களையும் நுண்ணுயிரிகளையும் சுமந்து நுரையீரலுக்குள் சென்று சுவாசப் பிரச்சினைகள், அழற்சி மற்றும் நீண்டகால நோய்களை ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க.


