News November 14, 2025
செங்கல்பட்டு: சாலையில் படுத்திருந்த மாடால் விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றிரவு, சாலையின் நடுவே படுத்திருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற முஜிப் (21) என்ற நபர் மோதி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
செங்கல்பட்டு: வாடகை வீட்டில் பாலியல் தொழில்!

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட மணிமங்கலம், வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மசாஜ் சென்டர் பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்ததில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். 3 பெண்களை மீட்டு, பாலியல் தொழில் நடத்தி வந்த பிரசாந், சபரீஷை போலீஸ் கைது செய்தனர்.
News November 14, 2025
செங்கல்பட்டு: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

செங்கல்பட்டு மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 14, 2025
செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <


