News November 12, 2025
சாக்கடையில் வீசப்பட்ட குழந்தை: கோவையில் கொடூரம்!

சூலூர் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பிறந்து சில மணி நேரங்களை ஆன குழந்தையை மர்ம நபர்கள் சாக்கடையில் வீசிச் சென்றனர். உயிருடன் இருந்த குழந்தையை அப்பகுதியினர் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர். மனசாட்சி இல்லாத இந்த செயலை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 12, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, உடையாம்பாளையம், சர்க்கரசமக்குளம், கோவில்பாளையம், குரும்பகாபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 12, 2025
கோவை காவல்துறை எச்சரிக்கை!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 97 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
News November 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


