News November 2, 2025
சனி பகவானின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க..

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருள்களை வைக்கக்கூடாது. ➤துருப்பிடித்த பொருள்களை தூக்கி எரியுங்கள் ➤வீட்டின் மாடியை அழுக்காக வைத்திருக்க வேண்டாம் ➤பழைய பொருள்களை, அழுக்கான பொருட்களை வீட்டிற்குள் வைக்காதீங்க. இவற்றை வைத்திருந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Similar News
News November 2, 2025
இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?
News November 2, 2025
கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
News November 2, 2025
BREAKING: SIR-ஆல் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


