News November 12, 2025
கோவை சாலைகளில் லாரி விபத்துகளில் 32 பேர் உயிரிழப்பு

கோவை நகரில் ஜனவரி முதல் அக்டோபர் வரை லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம். பீக் ஹவரில் லாரி நுழைவுத் தடையும், மணிக்கு 30 கி.மீ வேக வரம்பும் அமலில் இருந்தாலும், மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
கோவை: 10th போதும் ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மேட்டுப்பாளையம் அடுத்த வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ மனோகரன். இவர் நேற்றிரவு சிறுமுகையில் இருந்து பணி முடித்து விட்டு பாலப்பட்டி வழியாக டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலப்பட்டியில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற பிக்கப் வாகனத்தின் மீது டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில், ராஜ மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, உடையாம்பாளையம், சர்க்கரசமக்குளம், கோவில்பாளையம், குரும்பகாபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


