News November 2, 2025
குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 22 கோடியில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு ₹21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 2, 2025
குமரி: இனி வெளிநாட்டில் வேலை பெறலாம்

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
News November 2, 2025
குமரி சந்தைகளில் கெட்டுப் போன மீன்கள் அழிப்பு

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த அக்.31 அன்று ஊரம்பு மீன் சந்தையில் 80 கிலோ கெட்டுப்போன செம்பள்ளி மீன்களை அழித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.1) நடைக்காவு சந்தையில் 45 கிலோ, நித்திரவிளை சந்தையில் 15 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனையாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அழிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
News November 2, 2025
கன்னியாகுமரியில் ரூ.21.95 கோடியில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


