News November 2, 2025
குமரி சந்தைகளில் கெட்டுப் போன மீன்கள் அழிப்பு

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த அக்.31 அன்று ஊரம்பு மீன் சந்தையில் 80 கிலோ கெட்டுப்போன செம்பள்ளி மீன்களை அழித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.1) நடைக்காவு சந்தையில் 45 கிலோ, நித்திரவிளை சந்தையில் 15 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனையாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அழிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Similar News
News November 2, 2025
குமரி: பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு <
News November 2, 2025
குமரி: தனியார் பாரில் அதிரடி சோதனை

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News November 2, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


