News November 12, 2025
குண்டுவெடிப்புக்கு மூளையாக விளங்கியவர் இவரா?

ஃபரீதாபாத்தில் டாக்டர்களை மூளைச்சலவை செய்து டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியதாக இமாம் இர்ஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அரசு ஹாஸ்பிடலில் பணிபுரிந்த இவர், பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அங்கு வந்த மற்ற டாக்டர்களுடன் பழகி, அவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கொள்கைகளை கற்பித்து மூளை சலவை செய்திருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News November 12, 2025
தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவும், பொது வீரராக பங்கேற்ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்வின் போது ராணி முன்னால் இருந்த சிப்பாயை பிரக்ஞானந்தா கவனக்குறைவாக நகர்த்தினார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்னர் 41-வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
News November 12, 2025
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முடிவுகளை <
News November 12, 2025
தனித்தனியாக ஆலோசனை செய்யும் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். அப்போது, 2026 தேர்தலில் கட்டாயம் திமுக வெற்றிபெற வேண்டும; தோல்வியடைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், யாரை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற கருத்தையும் கேட்டுள்ளார்.


