News November 2, 2025

காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

image

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 2, 2025

வங்கிக் கணக்கில் ₹2,000.. வந்தது புதிய அப்டேட்!

image

நீண்ட காலமாக PM கிசான் யோஜனா திட்டத்தின் 21-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்படும் என சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், பிஹாரில் முதல்கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 2, 2025

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

image

CM ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) தொடங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், தேமுதிக உள்ளிட்டவை பங்கேற்ற நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

News November 2, 2025

குழந்தைகள் புத்தகம் வாசிப்பது ஏன் அவசியம்?

image

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் கூட மொபைலில் தான் மூழ்கியுள்ளனர். ஏன், பெற்றோர்களே போனை கையில் கொடுக்கின்றனர். அது ஆபத்து எனக்கூறும் டாக்டர்கள், குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை கற்று கொடுக்க சொல்கின்றனர். புத்தகம் வாசித்தால் கவனச்சிதறல் குறையும், மன அழுத்தம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மேம்படும், சிந்தனை திறன் வலுவாகும், சொல்வளம் பெருகும் என அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!