News November 14, 2025
கள்ளக்குறிச்சி: ஹோட்டலில் 32 கிலோ குட்கா!

கள்ளக்குறிச்சி: புதூர் கிராமத்திலுள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நேற்று (நவ.13) உதவி ஆய்வாளர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட 32.5 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: HORN அடித்ததற்கு கொலை மிரட்டல்!

தாவடிப்பட்டையைச் சேர்ந்த அப்பாஸ் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (நவ.13) பேருந்தில் கரடிசித்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஆட்டோ ஓட்டி சென்ற ராஜபாண்டி, சஞ்சய் இருவரும் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பாஸ் Horn அடித்ததற்காக, பேருந்தை மறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


