News November 1, 2025

கள்ளக்குறிச்சி:பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் நவ.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

கள்ளக்குறிச்சி:தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் காயம்

image

வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று,(நவ.1) நாகராஜின் மகன் விதுன்ராஜ் 4; தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் திரிந்த தெரு நாய்கள் விதுன்ராஜை கடித்து குதறியது. சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: தந்தை திட்டியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் சேர்ந்த மணிவண்ணன் மகள் மோனிஷா சின்னசேலம் அருகே தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 1ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று (நவ.1) மோனிஷா வீட்டு வேலைகளை செய்யவில்லை என அவருடைய தந்தை திட்டியுள்ளார். இதனால், மோனிஷா வீட்டில் இருந்த விஷயத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!