News November 12, 2025
கரூர்: ராஜவாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நேதாஜி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (55), ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
News November 11, 2025
கரூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் (நவம்பர் 14) அன்று “உழவரை தேடி” வேளாண் திட்ட முகாம்கள் 8 இடங்களில் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், தான்தோன்றிமலை, அரவக்குறிச்சி, மத்தி வட்டங்களில் உள்ள கிராமங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், பயிர்க்கடன், அரசு உதவித் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


