News November 2, 2025
கரூர்: பெட்டிக்கடையில் மது விற்ற நபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரமேஷ் (37). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற ரமேஷ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டிகளும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 2, 2025
கரூர்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<
News November 2, 2025
கரூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

கரூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
குளித்தலை அருகே விபத்து!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (60). இவர் தனது ஸ்கூட்டியில் கோட்டைமேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் செல்வகுமார் ஒட்டி வந்த லாரி மோதியதில் சம்பத் வலது கையில் காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரின் மகள் நித்திய லட்சுமி புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


