News November 14, 2025

ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

image

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 14, 2025

திண்டுக்கல் சிறுமியை சீரழித்த இளைஞர்: அதிரடி தீர்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாக அருள் பிரசாத் (21) என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையின் முடிவில், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருள் பிரசாத்திற்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.5,000 அபராதம் விதித்தது.

News November 14, 2025

அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் அரசுப் பணிக்காலியிடங்களுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கான இலவச ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளை 14.11.2025 துவங்குகிறது. SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்படும். ஆர்வமுள்ளோர் நேரடியாக மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் ஆட்சியர் தெரிவிப்பு.ஷேர் பண்ணுங்க

News November 14, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில் , “அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் கைபேசிக்கு வரும் பகுதி நேர வேலைவாய்ப்பு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
மோசடி தொடர்பான புகார்களுக்கு உதவி எண்: 1930, வலைத்தளம்: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!