News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் தினம் – கனிமொழி முகநூல் பதிவு

தூத்துக்குடி எம் பி கனிமொழி எல்லை போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு முகநூல் பக்கத்தில் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று குடியரசாக மலர்ந்த இந்திய ஒன்றியத்தின் மூலாதாரமாக இருக்கும் மாநிலங்களின் எல்லைகள் மொழிவாரியாக வரையறுக்கபட்ட இந்நாளில், எல்லை போராட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். தாய்நிலத்தை காக்க போராடிய அவ்வீரர்களின் தியாகங்கள் யாவும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 2, 2025
தூத்துக்குடி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் 32 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில்<
News November 2, 2025
தூத்துக்குடி: தாய் – மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு

முள்ளகாடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம். இதய பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பாக்கியம் மகன் முத்துராஜ் நேற்று முன்தினம் இறந்தார். அன்று இரவு பாக்கியமும் இறந்துவிட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து தாய், மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 2, 2025
தூத்துக்குடியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தாயுமானவர் திட்டப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ. 3) மற்றும் நாளை மறுநாள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


