News November 2, 2025

ஆத்துார் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி பலி!

image

ஆத்துார் தென்னங்குடிபாளையம் ஊராட்சி அய்யனார்பாளையத்தை சேர்ந்த, மஞ்சுளா, நேற்று, வீட்டின் முன் நிலத்தில் பதித்து வைத்துள்ள, 10 அடி ஆழ தொட்டியில், குடத்தில் தண்ணீர் எடுக்க முயன்றார். அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்த அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத் தினர், தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து வெளியேவிட்டு பார்த்தபோது, மஞ்சுளா இறந்திருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 2, 2025

எடப்பாடி அருகே பழக்கடையில் புகுந்த கார்!

image

சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். மேலும் கடையிலிருந்து அனைத்து பழங்களும் நசுங்கி வீணானது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

சேலம் வழியாக புதிய சிறப்பு ரயில் சேவை!

image

ஹூப்ளி மற்றும் இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் (எண் 07355) சேலத்தில்
சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு வரும், 7.55 மணிக்கு புறப்படும். ரயில் எண் 07356 ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு வரும்,5.50 மணிக்கு புறப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். **

News November 2, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!