News November 12, 2025

அரியலூர்: 15 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள்!

image

அரியலூர், இயற்கை சீற்றங்களால் நெல்லில் மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

அரியலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக் செய்து<<>>, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

அரியலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 12, 2025

அரியலூர்: வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக பிரிவு காவல்துறையினரால் மது குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 28 இருசக்கர வாகனங்கள், அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், நாளை (நவ.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஏலம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!