News August 8, 2024

விவசாயிகளுக்கு ₹5,400 மானியம்: தமிழக அரசு

image

தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஹெக்டேர் ஒன்றிற்கு அதிகபட்சமாக ₹5,400 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கு, ஆதார், வங்கி புத்தகம், நிலச் சான்றிதழ் சிட்டா, பட்டா, நிலவரைபடம் ஆகிய ஆதாரங்கள் வழங்க வேண்டும். தி.மலை, சேலம், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

Similar News

News November 17, 2025

கிருஷ்ணகிரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

தேன்கனிக்கோட்டை அருகே சின்னதோகரை பகுதியை சேர்ந்த மது (29) என்ற கூலித்தொழிலாளிக்கு, மது அருந்தும் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடன் தகராறு நடந்து வந்தது, இதன் காரணமாக மனைவி தந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மனமுடைந்து மது வீட்டில் தூக்கிட்டு நேற்று (நவ.16) தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2025

இராம்நாடு: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

image

இராம்நாடு மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தொழில் தொடங்க ₹50 லட்சம் தரும் அரசு திட்டம்

image

உற்பத்தி மற்றும் சேவைத் துறையில், தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசின் PMEGP திட்டம் ₹50 லட்சம் வரை கடன் வழங்குகிறது. பெறப்படும் கடனுக்கு 35% மானியமாக வழங்கப்படுகிறது. கடனை அடைக்க 7 ஆண்டுகள் வரை நேரம் கொடுக்கப்படும். 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த திட்டத்திற்கு <>www.kviconline.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE

error: Content is protected !!