News May 14, 2024
₹16,900 கோடி நிறுவன அதிபரான அக்கவுண்டன்ட்

நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜோதி லேபாரட்டரீஸ் ₹16,900 கோடி சந்தை மதிப்பு கொண்டது. உஜாலா, எக்ஸோ பார் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது. அந்நிறுவன அதிபரான எம்.பி. ராமசந்திரன், கேரளாவைச் சேர்ந்தவர். பிகாம் படித்துள்ள அவர், முதலில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றினார். பிறகு சகோதரரிடம் ₹5,000 கடன் வாங்கி, தனது மகள் ஜோதி பெயரில் அந்நிறுவனத்தை 1983இல் தொடங்கி சாதித்தார்.
Similar News
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.
News December 10, 2025
Ro-Ko இல்லாமல் WC இல்லை!

2027 WC ODI-யை Ro-Ko குறிவைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு BCCI ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி உள்ளது. ஆனால், எங்களை எளிதில் ஓரம் கட்டிவிட முடியாது என Ro-Ko நிரூபித்துள்ளனர். ODI பேட்டர்களின் தரவரிசை பட்டியலில், ரோஹித் முதல் இடத்திலும், கோலி 2-வது இடத்திலும் உள்ளனர். இதனை கொண்டாடும் நெட்டிசன்கள், இவர்கள் இல்லாமல் இந்தியாவுக்கு WC இல்லை என BCCI-யை டேக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


