News May 2, 2024
புற்றுநோய் பாதித்த நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி புஷ்பம் (61). இவர் டிச.3 அன்று கார்த்திகை விளக்கேற்றும் போது சேலையில் தீ பிடித்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 11, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!
News December 11, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


