News October 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிச.15-ல் பணம் கிடைக்கும் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள், செல்போன் எண், ஆதார், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்படவுள்ளன.
Similar News
News December 10, 2025
கூட்டணிக்கு EPS-தான் தலைவர்

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
CM-ஐ தூங்கவிடாமல் செய்யும் EPS: செம்மலை

அரசியலில் எதிரிகள், துரோகிகளின் விமர்சனங்களை கடந்து செல்லும் EPS-யிடம் அசாத்திய துணிச்சலை பார்ப்பதாக செம்மலை கூறியுள்ளார். ஆளுங்கட்சி திட்டமிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவதாக கூறிய அவர், பொதுக்குழு கூட்டத்தில் EPS-ன் உரையால் கட்சிக்கு உத்வேகம் பிறக்கும் எனவும் பேசியுள்ளார். தூங்காமல் களப்பணிகளை செய்துவருவதாக CM கூறுவது பொய் எனவும், EPS தான் CM-ஐ தூங்கவிடாமல் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
BREAKING: அதிரடி மாற்றம் செய்தார் EPS

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக EX அமைச்சர் KP முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள KP முனுசாமி, EPS மீது அதிருப்தியில் உள்ளதாக அண்மைக் காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


