News August 22, 2025
வேலூர்: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News January 21, 2026
வேலூர் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989. ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
வேலூரில் நில அளவர்களுக்கான சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான நில அளவை பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் உதவி இயக்குநர் (நில அளவையர்) குமணன் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
News January 21, 2026
வேலூர் சிறை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்

செங்கம் பகுதியை சேர்ந்த குணால் (24). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். வழக்கு தொடர்பாக நேற்று (ஜன.20) திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதனையில் இவர் ஆசனவாயிலில் 10 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீசில் விசாரித்து வருகின்றனர்.


