News November 11, 2025
வேலூர்: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க நாளை (டிசம்பர் 06) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 05) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
வேலூர்: சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி!

காட்பாடி அரும்பருதி பகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று (டிச.4) திருவலம்-காட்பாடி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த பைக் நீலமேகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீலமேகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: நாளை மின்தடை எற்படும் பகுதிகள்!

வேலூர், மேல்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (டிச.6) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கள், பெருமாள் குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.


