News December 14, 2025
வேலூர்: ரூ.20 லட்சம் மாயம் – விவரம் வெளிவந்தது!

வேலூர், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (47) பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு, அலுவலகத்தில் ரூ.20 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அலுவலகத்தை திறந்து பார்த்த போது, அங்கு வைத்திருந்த 20 லட்சம் காணவில்லையாம். இது தொடர்பாக சுரேஷ் நேற்று (டிச-13) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
வேலூர்: தொழிற்சாலையில் துடிதுடித்து பலி!

பேரணாம்பட்டு அஷன் பாஷா என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் நேற்று பணியில் இருந்த ஷேக் அலி (60) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகியோருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
வேலூர்: குழந்தையோடு கதறிய பெண்!

ஆந்திராவை சேர்ந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிறந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வேறொரு வாலிபருடன் சேர்ந்து வேலூர் தொரப்பாடியில் வசித்து வந்தார். இருவருக்கும் 1 பெண் குழந்தை உள்ள நிலையில் வாலிபருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அவர் பெண்னிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் இப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
News January 25, 2026
வேலூர்: போதையில் மூதாட்டியிடம் வெறி செயல்!

பெரியபரவக்கல்லை சேர்ந்தவர் அஜித்குமார் (24). குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை (77) அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மயங்கிய மூதாட்டி, இறந்து விட்டதாக நினைத்து அஜித் சென்று விட்டார். பின் மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குடியாத்தம் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


