News November 29, 2024

வேலூர்: ராணுவ ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறை

image

ஊட்டி ராணுவக் கல்லூரியில் ஓட்டுநராக இருந்த உ.பி.யைச் சேர்ந்த யோகேந்திர சிங் பயில்வார், கடந்த 2018ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானார். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் ராணுவ ஊழியர் யோகேந்திரசிங் பயில்வார்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60,000 அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Similar News

News November 19, 2025

வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

image

வேலூர், பெருமுகை ஊராட்சி மன்ற தலைவராக புஷ்பராஜ் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் பெருமளவு நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் செக் பவரை ரத்து செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அதிரடி உத்தரவிட்டார்.

News November 18, 2025

வேலூர்: தமிழிசை முன்னிலையில் SIR விளக்க கூட்டம்!

image

வேலூர், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.18) நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!