News August 9, 2025
வேலூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை. கவனம் மக்களே!

வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News November 8, 2025
வேலூர் அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

அரியூர் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு ஆட்டை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டை திருடிய சத்துவாச்சாரியை சேர்ந்த சீனிவாசன் (27), பாபுசேட்டு (25), வினோத்குமார் (30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
News November 8, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 7, 2025
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


