News May 15, 2024
வேலூர் பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 6 முதல் 1ஆம் வகுப்பு பயிலும் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
Similar News
News December 6, 2025
வேலூர்: சிறுமி 3 மாதம் கர்ப்பம்.. வாலிபர் மீது போக்சோ!

வேலூர்: காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). இவருக்கும், வேளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. பின்னர், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தயார் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.
News December 6, 2025
வேலூர்: குடும்ப பிரச்சனையால் பெண் விபரீத முடிவு!

கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி மணிமேகலை (50). இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மணிமேகலை, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க இன்று (டிசம்பர் 06) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 05) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


