News September 29, 2025
வேலூர்: பணி நியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மகளிர் அதிகார மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் டிஆர்ஓ மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 16, 2025
வேலூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 22,492 பேர் பயன்!

வேலூரில் 2.8.2025 முதல் 15.11.2025 வரை 14 நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் 7,978 ஆண்கள், 14,514 பெண்கள் என மொத்தம் 22,492 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 419 பேருக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையும், 469 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பலர் பயன்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


