News October 19, 2025
வேலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
Similar News
News December 11, 2025
கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை : எஸ்பி எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (டிச.11) நடத்தப்பட்ட சோதனையில் 20 மது பாட்டில்கள் 25 லிட்டர் சாராய ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 11, 2025
வேலூர்: ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது. சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம்,கலை, அறிவியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் httpsawards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த விருதை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


