News May 9, 2024
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சிறப்பு!

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். கோட்டையின் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. கல்வெட்டின் படி, ஜலகண்டேஸ்வரர் அந்நாளில் ஜ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டுள்ளார். மிகத்தொன்மைக் கோயிலான இதில் கலைநயமிக்க சிலைகள் ஏராளம் இருக்கின்றன.
Similar News
News March 8, 2026
வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் <
News March 8, 2026
வேலூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
காட்பாடியில் வெல்லப்போவது யார்?

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.


