News July 12, 2024

வேலூர்-காட்பாடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

வேலூர்-காட்பாடி சாலையில் இன்று மாலை பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விருதம்பட்டு பகுதியில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. வழக்கமாக இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் மழையின் காரணமாக கூடுதலாக நெரிசல் ஏற்பட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Similar News

News July 10, 2025

வேலூரில் குரூப்-4 தேர்வு எழுதும் 24,654 பேர்

image

வேலூர் மாவட்டத்தில் வரும் 12.7.2025 அன்று நடைபெறும் TNPSC குரூப்-4 தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 84 தேர்வு மையங்களில் மொத்தம் 24,654 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். இது தொடர்பாக ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். தேர்வர்கள் நேரத்திற்கு முன்னதாக மையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News July 9, 2025

வேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலையைக் கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

News July 9, 2025

வேலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

வேலூரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு 113 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உயரம், எடை, ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

error: Content is protected !!