News May 3, 2024
வேலூர் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக இவரை குடியாத்தம் போலீசார் கைதுசெய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (மே 2) மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
Similar News
News November 10, 2025
வேலூரில் நாளை மின் தடை

வேலூரில் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கொணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன், சார்பனா மேடு, இறைவன்காடு: வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் மின் தடை ஏற்படும்
News November 10, 2025
வேலூரில் 1,056 பேர் ஆப்சென்ட்!

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 9,561 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வி.ஐ.டி. பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 8,505 பேர் எழுதினர் எனவும், 1,056 பேர் எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


