News January 13, 2025
வேலூரில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

வேலூர் கோட்டையின் பின்புறம் கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் உள்ள கிணற்றில் கண்ணாடி விரியன் பாம்பு எதிர்பாராத விதமாக விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதைக்கண்ட கோசாலை நிர்வாகிகள் வேலூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் பாம்பு பிடிக்கும் நபருடன் அங்கு சென்று கிணற்றுக்குள் தவித்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
Similar News
News November 11, 2025
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
வேலூர் மக்களே, விமான நிலையத்தில் வேலை வேண்டுமா?

12-ம் வகுப்பு/டிகிரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் விமான நிலையத்தில் Cabin Crew, Air Cargo Introductory+ DGR உட்பட பல்வேறு பிரிவுகளில் பணி செய்ய வாய்ப்பை தாட்கோ ஏற்படுத்தி தருகிறது. இந்த 6 மாத பயிற்சிக்கான செலவுகளை தாட்கோ முற்றிலும் ஏற்கும். விண்ணப்பிக்க விரும்பும் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் <
News November 11, 2025
வேலூர்: காதல் தோல்வியால் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(23). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆனதால் ஜெகநாதன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ.10) அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


