News August 5, 2024
வேன் மோதி துப்புரவு பணியாளர் பலி

தாம்பரம் – முடிச்சூர் சாலையில், கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த தர்மன்னா (28) இன்று (ஆகஸ்ட் 5) காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து தக்காளி ஏற்றி வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில், தர்மன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய லட்சுமணன் (23) படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 14, 2026
செங்கை: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
செங்கை: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 14, 2026
செங்கல்பட்டு: சம்பளப் பிரச்னையா? உடனே CALL!

தி.மலை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <


