News April 2, 2025

வெம்பக்கோட்டை அகழாய்வில் அடுத்த அதிஷயம்

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் “தங்கத்தால் செய்யப்பட்ட மணி” ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 15, 2026

JUST IN விருதுநகருக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

image

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 15, 2026

அருப்புக்கோட்டை: விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சரவணபாலன்(35). இவர் நேற்று(ஜன.14) பைக்கில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் சாலை நடுவே உள்ள பேரிகார்டில் பைக் மோதி சரவணபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 15, 2026

விருதுநகர்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!