News August 6, 2025
வீட்டை உடைத்த கரடி: அச்சத்துடன் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News November 7, 2025
நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 7, 2025
நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
News November 6, 2025
நீலகிரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


