News November 14, 2025
விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.313 கோடி வரவு வைப்பு

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 13.11.2025 வரை 28,930 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 313 கோடியே, 55 இலட்சத்து, 14 ஆயிரத்து 412 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கொள்முதல் பணிகள் முழு வீச்சு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 7, 2025
நாகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
நாகை : அழுகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் அழுகி சேதமடைந்த நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி, உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர். சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும், முழுமையான நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


