News August 22, 2025

விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 2000 டன் உரங்கள் தயார்!

image

என்.சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்; மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது,விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்.

Similar News

News January 24, 2026

நீலகிரி: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>Sanchar Saathi <<>>என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

நீலகிரி மீண்டும் வந்தது.. சோதனை வெற்றி!

image

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் நீராவி இன்ஜின்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பர்னஸ் ஆயிலிலிருந்து டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்புக்காக திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து பழுதுகளும் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை ஒரு பெட்டி இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

error: Content is protected !!