News August 18, 2025
விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News December 14, 2025
விழுப்புரம்: ஐகோர்ட்டு வக்கீல் விபரீத முடிவு!

விழுப்புரம்: திண்டிவனத்தைச் சேர்ந்த சாமிசந்திரன் (38) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி காமாட்சி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சாமிசந்திரன், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 14, 2025
விழுப்புரம்: அரசு நிலத்திற்கு இரு தரப்பினர் மோதல்!

கீழ்நெமிலியை சேர்ந்த பாஸ்கர், மூர்த்தி என்பவரிடம் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது, அருகே இருந்த அரசு நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் தங்களுக்கு வழிப்பாதை விட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் மூர்த்தி. ஆனால், பாஸ்கர் அந்த நிலத்தில் பயிரிட்டதுடன், வழி விட மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 14, 2025
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. மாணவன் மீது போக்சோ!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜோஸ்வா (19), விழுப்புரம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


