News June 18, 2024
விழுப்புரம்: வே2நியூஸ் எதிரொலி… நடவடிக்கை

கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கிவந்த நியாயவிலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸில் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டடத்தில் நியாயவிலை கடை இயங்கிவருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
Similar News
News January 15, 2026
விழுப்புரத்தில் துணிகரம் – பூட்டிய வீட்டில் கொள்ளை!

விழுப்புரம்: பெரியார் நகரைச் சேர்ந்த நிர்மல் குமார், மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா பெரியார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில், இந்திரா தனது வீட்டை பூட்டிவிட்டு, நேற்று வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 15, 2026
விழுப்புரம்: காதலியிடம் மோசடி – காதலன் அதிரடி கைது!

திண்டிவனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் (27), கடலூரைச் சேர்ந்த வாலிபர் துரைராஜும் சென்னையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி துரைராஜ் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்த துரைராஜ் திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கில் போலீசார் துரைராஜை கைது செய்தனர்.
News January 15, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 14.01.2026 முதல் இரவு ரோந்து காவல்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. DSP எம்.எஸ். ரூபன்குமார் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். குற்றச்செயல்கள் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.


