News November 25, 2025
விழுப்புரம்: மகனே தாய்க்கு எமனாகிய கொடூரம்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நேற்று (நவ.25) முன் தினம் இவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டி கேட்ட தாய் விஜயலட்சுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாய் முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 14.01.2026 முதல் இரவு ரோந்து காவல்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. DSP எம்.எஸ். ரூபன்குமார் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். குற்றச்செயல்கள் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
News January 14, 2026
விழுப்புரம்:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

விழுப்புரம் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*திருவாமாத்தூர் ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோவில்
*திருநாவலூரில் உள்ள ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் ஆலயம்
*மயிலம் முருகன் கோயில்
*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
விழுப்புரம்: சமத்துவ பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நடைபெற்றது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


