News November 26, 2025

விழுப்புரம்: பெண் மர்ம சாவு – திடீர் திருப்பம்!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27) தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் பார்வதி இறந்து கிடந்தார். இந்நிலையில், அவருக்கும், கணவர் மதியழகனுக்கும் ஏற்பட்ட தகராறில், மதியழகன் பார்வதியை சுவற்றில் முட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், போலீசார் மதியழகனை கைது செய்தனர்.

Similar News

News January 18, 2026

விழுப்புரம்: பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்து பலி!

image

விழுப்புரம், திண்டிவனம் அருகே தானங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் துரை (48). இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் ஆத்தூர் டோல்கேட்டில் இருந்து தானங்குப்பத்துக்குச் சென்று கொண்டிருந்தார். கரிக்கம்பட்டு வளைவில் ஆட்டோவை வளைத்தபோது, சாலையோர பள்ளத்தில் ஆட்டோவோடு கவிழ்ந்தார். இந்தச் சம்பவத்தில் துரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2026

விழுப்புரம்: சாலை விபத்தில் ஒருவர் கொடூர பலி

image

திருவெண்ணெய்நல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (62). இவர் நேற்று முன்தினம் கொசுவர்த்தி வாங்க பைக்கில் சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (20). திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மீது மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்ர் அழகிரி விசாரித்து வருகிறார்.

News January 18, 2026

விழுப்புரம்:காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!