News September 28, 2025
விழுப்புரம் : டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி II மற்றும் IIA) இன்று(28.09.2025) நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்கள் தேர்வு எழுதுவதை, மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News November 11, 2025
விழுப்புரம்: மாணவரின் விபரீத முடிவு!

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய அரசுக் கல்லூரி மாணவ கடந்த நவ.6ஆம் தேதி பைக்கில் ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றோரு பைக்கில் வந்த மூன்று பேர் உரசியபடி செனனர். இதைத் தட்டிக்கேட்ட மாணவரை சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தியதால் மனமுடைந்த மாணவர், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்றனர்.
News November 11, 2025
விழுப்புரம்: காதலனுடன் கணவருக்கு ஸ்கெட்ச் !

கடந்த 2023 ஆம் ஆண்டு செஞ்சி அருகே முடையூர் ஆற்றுப்பாலத்தில் சத்யராஜ் என்பவரை அடித்து கொலை செய்ய முயற்சித்த அவரது மனைவி சசிகலா ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த சசிகலாவின் காதலர் ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து தங்கள் காதலுக்கு இடையூறாக இருப்பதாக சத்தியராஜ் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News November 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


