News January 13, 2026
விழுப்புரம்: குட்கா விற்பனை: போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
இளமுருகன் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக இன்று (ஜன.13) அதிரடி சோதனை நடத்தினர்.
Similar News
News February 16, 2026
திண்டிவனம்: மயான கொள்ளை திருவிழாவில் போலீசார் தடியடி

திண்டிவனத்தில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (பிப்.16) மயான கொள்ளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பலவித வேடங்களில் நடனமாடியவாறு ஊர்வலமாக சென்றனர். அதில் சில இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் இடையூறு செய்தவர்களை லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
News February 16, 2026
விழுப்புரம்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

விழுப்புரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
விழுப்புரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


